முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் அதிமதுரம் பொடி.., எப்படி பயன்படுத்துவது?
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க அதிமதுரம் பொடியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- அதிமதுரம் பொடி- 1 ஸ்பூன்
- சந்தனப் பொடி- ½ ஸ்பூன்
- பச்சை பால்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் அதிமதுரம் பொடி மற்றும் சந்தனப் பொடியைச் சேர்க்கவும்.
பின் இதில் பச்சைப் பால் சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
அதன்பிறகு முகத்தை தண்ணீரில் கழுவி, உலர வைத்து.
பின் இந்த பேக்கை தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே முகத்தில் விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- அதிமதுர பொடி- 1 ஸ்பூன்
- ஆரஞ்சு தோல்- 1
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஆரஞ்சு தோலை உரித்து, கழுவி நன்கு அரைக்கவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் அதிமதுர பொடி மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்கவும்.
அடுத்து முகத்தை சாதாரண நீரில் கழுவி, இந்த பேக்கை தடவி 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
இதற்கடுத்து உலர்ந்ததும் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |