ஒரே வாரத்தில் கருவளையம் நீங்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தவகையில், முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிரந்தரமாக நீங்க உதவும் இயற்கை வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு- 1
- காபி தூள்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி அதனை தோலுரித்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து ஒரு பாத்திரத்தில் சாறை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து உருளைக்கிழங்கு சாறுடன் காபி தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இப்போது இதனை கண்களுக்கு அடியில் தடவி இரண்டு நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து 15 நிமிடம் அப்படியே விட்டுவிடவும்.
இறுதியாக கண்களை குளிர்ந்த நீரை பயன்படுத்தி கழுவிக்கொள்ளலாம்.
இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்திவர விரைவிலேயே கருவளையம் நிரந்தரமாக நீங்கி விடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |