உங்களுக்கு திடீர்னு நடுராத்திரியில் காய்ச்சல் வந்துட்டா? இதனை குறைக்க என்ன செய்யலாம் தெரியுமா?
பொதுவாக நம்மில் பலருக்கு இரவில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு விடும்.
இதனை குறைக்க நிறைய பேர் வீட்டில் உள்ள மருந்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி எடுப்பார்கள். ஆனால் அப்படி மருந்தை அதிகம் எடுத்தால், இது பின்னடைவில் பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்தும்.
ஆனால் முன்பெல்லாம் நம் முன்னோர்கள் காய்ச்சலுக்கு கை வைத்தியம் தானே பார்த்தார்கள்.
எனவே உங்களுக்கு காய்ச்சல் வந்தால் உடனே மருந்து மாத்திரைகளை எடுக்காமல், கை வைத்தியங்களை முதலில் முயற்சி செய்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
அந்தவகையில் காய்ச்சலைக் குறைக்கும் சில எளிய கை வைத்தியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- காய்ச்சல் அதிகமாக இருந்தால், சிறிது சூரியகாந்தி விதைகளை அரைத்து, அத்துடன் தேன் மற்றும் துளசியை வைத்து சாப்பிடுங்கள். ஒருவேளை உங்களால் இவ்வாறு சாப்பிட முடியாவிட்டால், துளசி டீ தயாரித்து குடியுங்கள். இது காய்ச்சலைக் குறைக்கும்.
- புதினா மற்றும் இஞ்சியை கொதிக்கும் நீரில் போட்டு, 10 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதை இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
- வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
- சந்தனம் குளிர்ச்சித்தன்மை கொண்டது. அதை அளவுக்கு அதிகமாக காய்ச்சல் அடிக்கும் போது நெற்றியில் தடவும் போது, அது அதிகப்படியான உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும்
- காய்ச்சலைக் குறைக்க 2-3 பூண்டு பற்களை தட்டி, 1/4 கப் சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்நீரைக் குடிப்பார்களாம்.