அடிக்கடி பல் வலி வருதா; அப்போ தினமும் இத செய்து பாருங்க
ஈறு பிரச்சினை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இலகுவாக வரக்கூடிய ஒரு பிரச்சினையாகும்.
பற்களின் வேர்களை பாதுகாப்பது தான் ஈறின் தொழிலாக காணப்பட்டு வருகின்றது எனலாம்.
ஈறு வெளிர் நிறத்தில் இருந்தால் எதோ ஒரு வகையில் பிரச்சினை வரபோகின்றது என்று தான் அர்த்தம். அதனால் தான் ஈறு வீக்கமடைந்து, வலி ஏற்பட்டும் மற்றும் இரத்தக்கசிவும் ஏற்படும்.
ஈறு வீங்குவதற்கான காரணங்கள்,
ஊட்டச் சத்து குறைபாடு, தொற்று நோய் மற்றும் கர்ப்ப காலம், கைபிடித்தல், தவறான முறையில் பல் கட்டுதல் மற்றும் தவறான முறையில் பல் விளக்குதல் போன்ற காரணத்தினாலும் இது வீங்கி வருகின்றது.
இதனால் அனைவருமே பாதிக்கப்பட்டு தான் வருகின்றார்கள். அதை வீட்டில் இருந்தவாரே எவ்வாறு தடுக்கலாம் என்று தெரியுமா? ஒரு சில அடிப்படை மூலிகைகளை வைத்தும் இதை முறையாக செய்யலாம். இந்த பதிவின் மூலம் அதை மேலும் தெரிந்துக்கொள்வோம்.
- கிராம்பு பொடியை பற்பொடியும் கலந்து, அதை பயன்படுத்தினால் பல் வலி மற்றும் ஈறுவலி குணமாக்கும்.
-
கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.
- உப்பு நீரில் கொப்பளித்தால் பல் வலி தொடர்ந்து வராது.
-
சூடான நீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து , பிழிந்து முகத்தில் ஈறு வலி இருக்கும் பகுதியில் ஒத்தடம் வைக்கலாம்.
- தேயிலை எண்ணெய் சில சொட்டுக்கள் வெதுவெதுப்பான நீரில் கலந்து நாளிற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.
- விட்டமின் D நிறைந்த உணவுகளை உண்டால் பற்கள், எலும்புகள் உறுதி பெறும், ஈறு பலப்படும்.