தங்கம் போல் முகம் ஜொலிக்க இந்த ஒரு பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
பொதுவாக, பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளதான் நினைப்பார்கள்.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க பச்சை பயிரை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை பயிறு- 2 ஸ்பூன்
- பால்- 3 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் பச்சைப்பயிறை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் அரைத்த பச்சைப்பயிறு பொடி, பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலைக்கவும்.
அடுத்து இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
இந்த பச்சைப்பயிறு பேஸ்பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து முகத்திற்கு பயன்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |