முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது?
முகத்தில் பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
இயற்கையான முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும் பேஸ்பேக் குறித்து பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- பால்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் பால் சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு 2-3 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர, கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
2. தேவையான பொருட்கள்
- முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்
- தக்காளி சாறு- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முல்தானி மிட்டி மற்றும் தக்காளி சாறு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின் இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிந்த நீரால் முகத்தை கழுவிக்கொள்ளலாம்.
இந்த பேஷ்பேக்கை வாரத்திற்கு 2 முறை என தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நிரந்தரமாக நீங்கும்.
மேலும், இந்த பேஸ்பேக் சருமத்தை இறுக்கமடையச் செய்வதோடு, நன்கு பிரகாசமாக மாற்றும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |