ஒரே வாரத்தில் முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த உதவும் எண்ணெய்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக, அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்யை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம் - 3
- தேங்காய் எண்ணெய்- ½ கப்
- லாவெண்டர் எண்ணெய்- சில துளிகள்
பயன்படுத்தும் முறை
முதலில் வெங்காயத்தை சற்று சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி குறைவான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, மிதமான தீயில் 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து வெங்காயம் பொன்னிறமானதும், அடுப்பை அனைத்து அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
இதற்கடுத்து அதை வடிகட்டி அந்த எண்ணெயை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, அதில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெயை ஊற்றி கலக்கவும்.
இந்த வெங்காய எண்ணெயை தலைமுடியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
பின் அதை 30 நிமிடம் ஊற வைத்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், ஒரே வாரத்தில் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |