முகம் உடனடி பளபளப்பை பெற உதவும் பால்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களுக்கு பொதுவாக முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளதான் விரும்புவார்கள்.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க பாலை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- பால்- 3 ஸ்பூன்
- மஞ்சள்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் மற்றும் காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர சருமம் பளபளக்கும்.
2. தேவையான பொருட்கள்
- பால்- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பால் மற்றும் தேனை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இதனை அடிக்கடி பயன்படுத்தும் போது முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |