2024 வரை இந்த பிராந்தியம் திறக்கப்படாது! ஐரோப்பிய வர்த்தக சபை எச்சரிக்கை
கடுமையான கொரோனா கொள்கைகள் காரணமாக ஹாங்காங் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை மீண்டும் திறக்கப்படாது என ஐரோப்பிய வர்த்தக சபை எச்சரித்துள்ளது.
சீனா தனது mRNA தடுப்பூசியை விநியோகிக்கும் வரை ஹாங்காங் மீண்டும் திறக்கப்படாது, இதற்கு 2023-ன் பிற்பகுதி அல்லது 2024-ன் ஆரம்பம் வரை ஆகலாம் என்று ஐரோப்பிய வர்த்தக சபை ஒரு வரைவு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
இது வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அறிக்கையில் எச்சரிக்கைப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் வைரஸைக் கட்டுக்குள் வைத்திருக்க ஹாங்காங் நிர்வகித்த போதிலும், அதன் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் இடைப்பட்ட ஊரடங்குகள் காரணமாக இது உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
அதேசமயம், இந்த மாத்தத்தில் ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய வர்த்தக சபை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ஹாங்காங் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.