சீன அரசுக்கு எதிராக சதி: ஹாங்காங் ஊடக அதிபர் ஜிம்மி லாய்கு 20 ஆண்டுகள் சிறை
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு வழக்கில் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் போராட்டம்
1997ம் ஆண்டு ஆங்கிலேயர் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற ஹாங்காங், சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
மேலும் ஒரே நாடு மற்றும் இரட்டை ஆட்சி முறைக்கு நடைமுறைக்கு கீழ் ஹாங்காங் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பதையும் சீனா ஒப்புக் கொண்டது.

இருப்பினும் பிராந்தியத்தில் ஜனநாயக சீர்திருத்தங்கள் தொடர்பாக அவ்வப்போது போராட்டங்கள் வெடிக்கும், இந்த போராட்டங்களை எந்தவொரு சமரசமும் இன்றி சீன அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு அடக்கும்.
அந்த வகையில் 2020ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவேற்றியது, இந்த சட்டத்தின் கீழ் ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
இதன் ஒரு பகுதியாக ஹாங்காங்கில் ஜனநாயக கோரிக்கையை முன்வைத்து பல கருத்துக்களை வெளியிட்ட “ஆப்பிள் டெய்லி” செய்தி நிறுவனத்தின் தலைவர் ஜிம் லாய்-ஐ சீன அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

ஜிம்மி லாய், நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாகவும், சீன அரசை வீழ்த்துவது தொடர்பாக அமெரிக்காவுக்கு அடிக்கடி அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்து அவர் கடந்த ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2020ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய்க்கு எதிரான வழக்கு விசாரணை 5 ஆண்டுகள் நீடித்த நிலையில் தற்போது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணையின் போது ஜிம்மி லாய் தன்னை சீன அரசின் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அரசியல் கைது என்று விவரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |