ஐரோப்பிய நாடொன்றில் இளம்பெண் ஆணவக் கொலை... ஆசிய தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கட்டாய திருமணத்திற்கு மறுத்த இளம் வயது மகளை ஆணவக் கொலை செய்த குற்றத்திற்காக பாகிஸ்தான் நாட்டவரான பெற்றோருக்கு இத்தாலி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பெற்றோரே கொலை செய்ய
கடந்த 2021ல் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. இத்தாலியில் போலோக்னாவுக்கு அருகிலுள்ள நோவெல்லாராவில் வசித்து வந்த 18 வயதான சமன் அப்பாஸ், மே 2021ல் திடீரென்று காணாமல் போனார்.
Credit: ANSA
மட்டுமின்றி, பாகிஸ்தானில் உள்ள உறவினரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை 2020ல் சமன் அப்பாஸ் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விசாரணை முன்னெடுத்த அதிகாரிகள், சமன் அப்பாஸின் பெற்றோரே கொலை செய்ய உத்தரவிட்டதாகவும், உறவினர் ஒருவர் தனது மருமகளை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்த நபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, மகளை கொலை செய்ய உத்தரவிட்ட பெற்றோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
2020 நவம்பரில் தமது பெற்றோர் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு, காப்பகம் ஒன்றில் அவர் தங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் 2021 ஏப்ரல் மாதம் தமது குடும்பத்தினரை சந்திக்க சென்ற சமன் அப்பாஸ் தனது கடவுச்சீட்டை கைப்பற்ற முயன்றுள்ளார்.
கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில்
அத்துடன் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, தனது காதலருடன் புது வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்த நிலையில் தான் சமன் அப்பாஸ் மாயமாகியுள்ளார்.
சமன் அப்பாஸ் மாயமான தகவலை அவரது காதலரே பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த மே மாதம் பொலிசார் சமன் அப்பாஸின் பெற்றோர் வசித்துவந்த குடியிருப்புக்கு விசாரிக்க சென்ற நிலையில், அவர்கள் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே தப்பியுள்ளது தெரிய வந்தது.
@getty
பொலிசார் மேற்கொண்ட விசாரனையில், சமன் அப்பாஸ் ஏப்ரல் 30 முதல் மே 1ம் திகதிக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. ஆனால் ஓராண்டுக்கு பின்னர் தான் அப்பாஸின் உடல் கைவிடப்பட்ட பண்ணை வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கொலை குறித்து தனது தந்தை பேசுவதைக் கேட்டதாகவும், தனது சகோதரியைக் கொன்றது மாமாதான் என்றும் அவரது சகோதரர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து ஷப்பார் அப்பாஸ் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 2023ல் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டார். ஆனால் சமன் அப்பாஸின் தாயார் நாஜியா ஷாஹீன் தற்போதும் பாகிஸ்தானில் தலைமறைவாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |