பர்கர் சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த மறக்க முடியாத அனுபவம்: பர்கருக்குள் என்ன இருந்தது தெரியுமா?
பொலிவியா நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றிருக்கிறார் ஒரு பெண்.
Estefany Benitez என்ற அந்த பெண் தான் ஆர்டர் செய்த பர்கரைக் கடிக்கும்போது வாயில் ஏதோ வித்தியாசமாக தட்டுப்பட, அது என்ன என பார்க்க, அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
ஆம், அந்த பர்கருக்குள் ஒரு மனித விரல் இருந்துள்ளது.
உடனடியாக உணவக ஊழியர் ஒருவரை Estefany அழைக்க, அந்த ஊழியர் வந்து தவறு நடந்துவிட்டது, மன்னியுங்கள், இதற்கு முன் இப்படி நடந்ததில்லை என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
அதற்குப் பின்னும் எதுவுமே நடவாததுபோல அந்த உணவக ஊழியர்கள் மற்றவர்களுக்கு உணவு விநியோகம் செய்துள்ளார்கள்.
பிறகு, அந்த உணவகத்தில் இறைச்சி வெட்டும் ஒருவர், தான் இறைச்சி வெட்டும்போது தன் விரலை இழந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த செய்தியை படத்துடன் Estefany சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, அதை 60,000 பேர் பார்வையிட்டபின், தற்போது அந்த உணவகத்தை தற்காலிகமாக மூடவும், அந்த உணவு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கமும் முடிவு செய்யப்பட்டுள்ளது.