15 ஆண்டுகளாக வேலைக்கு வராமல் அரசு சம்பளம் வாங்கி ஏமாற்றிய மருத்துவமனை ஊழியர்!
இத்தாலியில் ஒரு மருத்துவமனை ஊழியர் கடந்த 15 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் அரசு சம்பளம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் Catanzaro நகரத்தில் உள்ள Pugliese Ciaccio மருத்துவமனையில் தான் இந்த விநோதமான ஏமாற்று சம்பவம் நடந்துள்ளது.
Salvatore Scumace எனும் 67 வயதான அந்த நபர் கடந்த 2005-ஆம் ஆண்டு பொதுப் பணியாளராக Pugliese Ciaccio மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
மருத்துவமனை இயக்குனருடன் ஏற்பட்ட ஒரு சண்டையின் காரணமாக, அவர் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அதேசமயம் மருத்துவமனை இயக்குனர் பெண் என்பதால், தன் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அவரை மிரட்டியுள்ளார்.
அவரது மிரட்டலுக்கு பயந்து அவரும், Scumace-ன் பெயரை வருகைப் பதிவிலிருந்தும் நீக்காமல் விட்டுவைத்துள்ளார்.
அடுத்த ஒரு வருடத்தில் அவர் பணியிலிருந்து ஒய்வு பெற்றதால், அவருக்கு பின் இதுவரை அந்த பணிக்கு வந்த பொறுப்பாளர்களும் ஊழியர்களின் பதிவுகளை சரிபார்க்காமல் இருந்துள்ளனர்.
இதனால் Scumace-க்கு ஒவ்வொரு மாதமும் அரசு சம்பளம் வந்துகொண்டே இருந்துள்ளது. கடத்த 15 ஆண்டுகளாக அவருக்கு 538,000 யூரோ (464,000 டொலர்) சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், Scumace ஏமாற்றிவந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் 6 மேலாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று மோசடிகள் வேறெங்கும் நடந்துள்ளதா என்பதை கண்டறிய மேலும் 57 மருத்துவமனைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.