ஐரோப்பாவிலேயே அதியுச்ச வெப்பநிலையை பதிவு செய்த நாடு!
ஐரோப்பா கண்டத்தின் தெற்குப் பகுதிகளைச் சுட்டெரிக்கும் வெப்ப அலை நீடித்துவரும் நிலையில் அதியுச்ச வெப்பநிலை இத்தாலியில் பதிவாகியுள்ளது.
இத்தாலியின் சிசிலியில் புதன்கிழமை வெப்பநிலை 50C அளவை நெருங்கியது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், Syracuse நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு 48.8C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஆனால் உண்மையில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதா என்ற கேள்வியும் பொதுமக்களிடம் இருந்து எழுந்துள்ளது.
பல பகுதிகளில் காட்டுத்தீ சூழ்ந்துள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கடுமையாக போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வார இறுதியில் வெப்பநிலை 40C வரையில் தகிக்கும் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.