போர்நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணிநேரங்களில் இஸ்ரேல் படையினருக்கும்-பாலஸ்தீனர்களும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது! வெளியான பரபரப்பு காட்சி
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த சில மணிநேரங்களில் பிரபல மசூதிக்குள் இஸ்ரேல் படைக்கும் பாலஸ்தீனர்களும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஜெருசலேத்தில் உள்ள பிரபலமான AL-AQSA மசூதிக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர், பாலஸ்தீன வழிபாட்டாளர்கன் மீது கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்கள் பிரயோகம் செய்து வன்முறையை தூண்டியுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே மசூதியில் இஸ்ரேல் பொலிஸ் வன்முறையில் ஈடுபட்டதில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தான் கடந்த 11 நாட்களாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடந்த போரை தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மே 21 வெள்ளிக்கிழமை முதல் போர்நிறுத்தததிற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டதை அடுத்து ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது.
இன்று வெள்ளிக்கிழமை AL-AQSA மசூதிக்குள் கூடி வழிபட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள், போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை கொண்டாடியுள்ளனர்.
Footage coming out of Al-Aqsa Mosque compound. pic.twitter.com/e754CpFAxr
— Arwa Ibrahim (@arwaib) May 21, 2021
இதனையடுத்து இஸ்ரேல் படையினர் மசூதி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
من اقتحام قوات الاحتلال بأعداد كبيرة لباحات الأقصى واعتداءاتها على المصلين والمرابطين فيه pic.twitter.com/d2RZP1Rmo8
— AlQastal القسطل (@AlQastalps) May 21, 2021
இஸ்ரேல் பொலிஸ் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்கள் பிரயோகம் செய்யும் காட்சிகளும், பதிலுக்கு பாலஸ்தீன போராட்டகாரர்கள் கற்களை வீசி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.