துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை
அமெரிக்காவில் பதின்ம வயது சிறுவனை துப்பாக்கி முனையில் உறவுக்கு அழைத்த குற்றச்சாட்டில், 30 வயது பெண்ணுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி முனையில் மிரட்டி
பென்சில்வேனியாவில் 30 வயது பெண்ணான கிறிஸ்டல் பெட்டான்கோர்ட் (Cristal Betancourt), 16 வயது சிறுவனுக்கு பராமரிப்பு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
ஆனால், அவர் குறித்த சிறுவனை துப்பாக்கி முனையில் மிரட்டி உறவுகொள்ள உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வரவே நீதிமன்ற உத்தரவின் பேரில் ஃபீஸ்டர்வில்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் குறித்த சிறுவன் வைக்கப்பட்டார். பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கிறிஸ்டல் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பின்னர் பரோலில் வெளியே வந்த அவர் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டார்.
வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, அந்த சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவரத்தை வைத்திருந்தார். 
பயந்துவிட்டதாக எழுதிய சிறுவன்
அவர் தனது ஐபோன் குறிப்புகளில் அப்பெண்ணைப் பார்த்து பயந்துவிட்டதாக எழுதினார். மேலும், அப்பெண்ணை மனநிலை சரியில்லாதவர் என்று நம்புவதாகவும், துப்பாக்கி முனையில் தன்னுடன் உறவு கொள்ளுமாறு கோரியதாகவும் சிறுவன் எழுதியதாகக் கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நிகழ்வு நடந்துள்ளது என்றும், தான் கர்ப்பமாக இருப்பதாக அப்பெண் சிறுவனிடம் குறுந்தகவல்களில் கூறியிருப்பதாகவும் என்பதும் தெரிய வந்துள்ளது.
பொலிஸார், குறிப்பிடப்படாத குற்றத்திற்காக சிறுவன் வீட்டில் வசிக்க உத்தரவிடப்பட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு, கூறப்படும் துஷ்பிரயோகத்தை கண்டுபிடித்ததாக தெரிவித்தனர்.
குற்றச்சாட்டுகள்
இந்த நிலையில் இளம்பெண் கிறிஸ்டல் மைனர் ஒருவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தல், துப்பாக்கியை வைத்து சிறுவனை மிரட்டியது, சிறார்களை தவறாக கையாளுதல் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
அவரை விசாரணை செய்த அதிகாரிகள், பரோல் மீறல் குறித்து விசாரித்தனர். மேலும் அவர் the group homeயில் இரண்டு கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறினார். ஆனால், பொலிஸார் ஒரு துப்பாக்கியை மட்டுமே கண்டுபிடித்தனர். பின்னர் மற்றொன்று திருடப்பட்டதாக கிறிஸ்டல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம் காணாமல்போன துப்பாக்கி, சிறுவன் வெளியிட்ட புகைப்படத்தில் தான் காட்டியிருந்த துப்பாக்கியுடன் பொருந்துவதாக கண்டறியப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால், சிறுவனை விசாரித்தபோது the group homeயில் அப்பெண் அவருடன் உறவில் ஈடுபட்டதாக நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சிறுவனுக்கு பணம் மற்றும் போதைப்பொருட்களை லஞ்சமாக வழங்கியதாகவும் கிறிஸ்டல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட கிறிஸ்டல் இன்னும் காவலில் எடுக்கப்படவில்லை. ஆனால், அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |