இரு நாடுகளிலும் பாதி பாதியாய் இருக்கும் வீடுகள்.., உலகின் மிகவும் குழப்பமான எல்லைக் கோடு
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைகள் கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே பிரிக்கப்படுகின்றன.
எந்த இரு நாடுகள்?
பொதுவாகவே இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைகள் என்றாலே பதற்றங்கள் தான் நிறைந்திருக்கும். ஆனால், இங்கு கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே இரு நாட்டின் எல்லைக் கோடுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்துக்கும் பெல்ஜியமிற்கும் இடையே பெர்லி என்ற நகரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை வெள்ளைக் கோடு மூலம் பிரிக்கப்படுகிறது.
இதில் என்ன சிக்கல் என்றால் இந்த கோட்டில் பல ஹோட்டல்கள், வீடுகள் உள்ளன. அதேபோல, பாதி கஃபேகள் பெல்ஜியத்திலும் பாதி நெதர்லாதிலும் உள்ளது. மேலும், வீடுகளில் கூட எல்லைகள் வெள்ளைக் கோடுகளால் பிரிக்கப்படுகின்றன.
இதனால் நெதர்லாந்தில் தூங்கும் மக்கள் பெல்ஜியத்தில் விழிக்கிறார்கள். நெதர்லாந்துக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான எல்லையானது 450 கிலோமீட்டர் நீளம் ஆகும்.
இதில், பார்லே-நாசாவ் மற்றும் பார்லே-ஹெர்டாக் போன்ற நகரங்கள் வழியாக 50 கிலோமீட்டர் தூரம் வழியாக செல்கிறது.
கடந்த 1830-ம் ஆண்டில் நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் தனி நாடாக பிரிந்த போது பல வீடுகள், கடைகள், தெருக்கள் போன்ற இடங்கள் எல்லைக்கோட்டிற்கு இடைப்பட்ட இடத்தில் வந்துவிட்டன.
இதனால் அங்குள்ள மக்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற குழப்பம் வந்தது. பின்னர், எல்லை கோடுகள் வரும் வீடுகளின் வாசல்கள் எங்கு உள்ளதோ அவர்கள் அந்த நாட்டின் குடிமக்களாக கருதப்படுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |