சவுதி மீது ஏவுகணை தாக்குதல்! தீவிரமடையும் மோதல்
சவுதி மீது ஹவுத்தி போராளிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
வெள்ளியன்று சவுதியின் தெற்கில் உள்ள ஜசான் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், சவுதி ஒரு சவுதி குடிமகன் மற்றும் ஒரு ஏமன் குடியிருப்பாளர் கொல்லப்பட்டனர்.
ஆறு சவுதி அரேபியர்கள், ஒரு பெங்காலி குடியிருப்பாளர் காயமடைந்தனர் மற்றும் அது 12 கார்கள் மற்றும் இரண்டு கடைகள் சேதமடைந்தது என்று சவுதி அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜசான் நகரத்தை குறிவைத்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஹவுத்தி இராணுவ செய்தித்தொடர்பாளர் Yahya Sarea கூறினார்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சவுதி தலைமையிலான கூட்டுப்படை வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஏமனில் ஹவுத்தி பகுதிகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.
ஏமனின் Al Mahwit பகுதியில் சவுதி நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் கொல்லப்பட்டதாகவும், 7 பேர் காயமடைந்ததாக ஹவுத்தி செய்தி டி.வி-யான Al Masirah தெரிவித்துள்ளது.