ஹவுதிகளின் அடாவடி தொடர்ந்தால்... ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் எச்சரிக்கை
ஹவுதிகளின் தாக்குதல் மீண்டும் தொடரும் என்றால் அமெரிக்கா பதிலடி அளிக்க தயங்காது என்று ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதிலடி உறுதி
செங்கடலில் வணிக கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் கிட்டத்தட்ட 30 ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் வெள்ளியன்று டசின் கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
@reuters
இதில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக ஹவுதிகள் தரப்பு தெரிவித்துள்ளதுடன், பதிலடி உறுதி என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி பைடன் தெரிவிக்கையில்,
தாக்குதல் வெற்றியடைந்ததாகவும், ஹவுதிகளை ஒரு பயங்கரவாத குழுவாக தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்த தாக்குதலின் போது 73 ஏவுகணைகள் ஏமன் மீது ஏவப்பட்டதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் விமர்சனம்
ஆனால் ஏமன் மீது போர் தொடுக்கும் விருப்பம் தங்களுக்கு இல்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
@reuters
இருப்பினும், எங்கள் துருப்புக்கள் மற்றும் எங்கள் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தை பாதுகாக்க ஜனாதிபதி பைடன் மேலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார் என்றார்.
வெள்ளியன்று நடந்த தாக்குதல்களுக்கு கனடா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட அமெரிக்க-பிரித்தானிய நட்பு நாடுகளின் ஆதரவும் இருந்தது என்றே கூறப்படுகிறது.
ஆனால் இந்த தாக்குதலுக்கு பிறகு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. தாக்குதல்கள் தொடங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் நாடாளுமன்ற குழுக்கள் முழுமையாக கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |