பிரித்தானியா மகாராணி எப்படி இருக்கிறார்? இளவரசர் பிலிப்பிற்கு அஞ்சலி செலுத்திய பின் நேரில் சந்தித்த இளவரசி வெளியிட்ட தகவல்
கணவர் இளவரசர் பிலிப் மறைந்த நிலையில் பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் எப்படி இருக்கிறார் என்பது குறித்து இளவரசி சோபி தகவல் தெரிவித்துள்ளார்.
தந்தை இளவரசர் பிலிப் காலமானதை அடுத்து இளைய மகன் இளவரசர் எட்வர்ட், அவரது மனைவி இளவரசி சோபி ஆகியோர் நேற்று வின்ட்சர் கோட்டைக்கு விரைந்தனர்.
இருவரும் இளவரசர் பிலிப்பிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, தனது தாயும் மகாராணியுமான இரண்டாம் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
இன்று வின்ட்சர் கோட்டையை விட்டு இளவரசர் எட்வர்ட், அவரது மனைவி இளவரசி சோபி ஆகியோர் காரில் வெளியேறினார்.
அப்போது மகாராணி இரண்டாம் எலிசபெத் மிகவும் நலமாக இருப்பதாக இளவரசி சோபி செய்தியாளர்களிடம் கூறினார்.
இளவரசர் பிலிப் இறந்ததைக் குறிக்கும் வகையில் இங்கிலாந்து முழுவதும், ஜிப்ரால்டர் மற்றும் கடலில் துப்பாக்கி சூடு மரியாதை நடைபெறுகின்றன.