27 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற தென் ஆப்பிரிக்கா - பரிசுத்தொகை எத்தனை கோடி தெரியுமா?
27 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வென்ற தென் ஆப்பிரிக்காவிற்கு கிடைக்கும் பரிசுத்தொகை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
27 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பை
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே WTC எனும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி போட்டி நடந்தது.
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 212 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, தென் ஆப்பிரிக்க அணியோ 138 ஓட்டங்களுக்கு சுருண்டது. 74 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா, 207 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
282 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, டெம்பா பவுமா மற்றும் எய்டன் மார்க்ரமின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2023-25 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற தென் ஆப்பிரிக்க அணி, 27 ஆண்டுகளுக்கு பிறகு முதல் ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.
டெம்பா பவுமா (Temba Bavuma) தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி 10 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. தோல்வியே காணாத தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பரிசுத்தொகை
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற தென் ஆப்பிரிக்க அணி ரூ.30.78 கோடி பரிசுத்தொகை பெற உள்ளது.
மேலும், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா அணிக்கு ரூ.18.46 கோடி பரிசுத்தொகை கிடைக்கும்.
தொடரில் கலந்து கொண்ட மற்ற அணிகளும், புள்ளிபட்டியலில் உள்ள தரவரிசை அடிப்படையில் பரிசுத்தொகை பெரும்.
இதன்படி, 3வது இடம் பிடித்த இந்திய அணி ரூ.12.33 கோடி பரிசுத்தொகை பெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |