இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கிற்கு எவ்வளவு செலவாகும்? ராணியின் தாயார் இறுதிச்சடங்கிற்கு எவ்வளவு ஆனது தெரியுமா?
இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கிற்கான செலவு, ராணியின் தாய் இறுதிச்சடங்கிற்கு ஆனதை விட குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது,
கடந்த வெள்ளிக் கிழமை இளவரசர் பிலிப் உயிரிழந்த நிலையில், வரும் 8 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து, வரும் சனிக்கிழமை இளவரசருக்கான இறுதிச்சடங்கு, அரச மரியாதை போன்றவை செய்யப்படும்.
இதனால் அரசரின் இறுதிச்சடங்கிற்கு ஆகும் செலவு, எப்போதும் அரச குடும்பத்தில் ஏற்படும் செலவை விட குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் இந்த கொரோனா காலக்கட்டத்தில், பொதுமக்களுக்கு அனுமதியில்லை, பொலிஸ் பாதுகாப்பு அதிகம் தேவைப்படுவதில்லை, இராணுவ மரியாதை போன்ற பல விஷயங்கள் குறைவாக பயன்படுத்தப்படலாம்.
இதன் காரணமாகவே மகாராணியாரின் தாய் இறுதிச்சடங்கிற்கு ஆன செலவை விட, இளவரசர் பிலிப்பிற்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
கடந்த 2002-ஆம் ஆண்டு மகாராணியாரின் தாய் மறைவைத் தொடர்ந்து அவரின் இறுதிச்சடங்கிற்கு 5.2 மில்லியன் பவுண்ட் மேல் செலவு ஆனதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய காலக்கட்டத்திற்கும், இப்போது இருக்கும் சூழ்நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
பக்கிங்ஹாம் அரண்மனை இளவரசர் இறுதிச் சடங்கை(கொரோனா தொற்று காரணமாக) அன்று செய்தது போல் செய்யாமல் முடிவு செய்துள்ளதால், செலவு கணிசமாக குறையும்.
லண்டன் மற்றும் விண்ட்சர் வீதிகளில் எந்த ஊர்வலங்களும் நடைபெறாமல் இருப்பதால், முதலில் திட்டமிடப்பட்டதை விட பொலிசாரின் எண்ணிக்கை மிகக் குறைவாக தேவைப்படும்.
இறுதிச்சடங்கு நடைபெறுவதற்கு முன்னர், இராணுவ வீரர்கள் பலர் விண்ஸ்டர் கோட்டையின் மைதானத்தை மரியாதை தெரிவிக்கும் வகையில் சுற்றி வருவார்கள்.
ஆனால் இப்போது கொரோனா சூழ்நிலை காரணமாக அது தேவைப்படாது. இளவரசர் பிலிப்பும் தன்னுடைய இறுதிச்சடங்கை பிரம்மாண்டமாக நடத்த வேண்டாம் என்று முன்பே கூறியுள்ளார்.
மகாராணியார் அம்மாவின் இறுதிச்சடங்கிற்கு சுமார் 11,887 பொலிசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், அதே போன்று 1,306 சிவில் ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இதனால் பொலிஸ் செலவினங்களுக்கு மட்டும் 3.4 மில்லியன் பவுண்ட்டும், மற்ற கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஊழியர்களுக்கு எப்படியும் 2.2 மில்லிய பவுண்ட்டும் செலவு ஆகியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆனால், இதை விட 2.1 மில்லியன் பவுண்ட் இறுதிச்சடங்கிற்கு கூடுதல் செலவு என்றும் ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் தன்னுடைய தாய்க்கான இறுதிச்சடங்கின் போது ஆன செலவுகள் பொதுமக்கள் வரிப்பணத்தில் மட்டும் செலுத்தப்படவில்லை, அதில் ராணியும் சில தொகைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.