ஹார்மோஸ் நீரிணை முடக்கத்தால் இணைய சேவை பாதிக்கும் அபாயம் - எப்படி தெரியுமா?
ஹார்மோஸ் நீரிணை முடக்கத்தால் இணைய இணைப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹார்மோஸ் நீரிணை முடக்கம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் அமெரிக்கா இடையேயான போர் காரணமாக மத்திய கிழக்கு மட்டுமல்லாது, இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடியுள்ளதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெட்ரோல், LPG தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பள்ளி கல்லூரிகளை இணைய வழியில் செயல்படுமாறும், ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரியவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில், வீட்டு பயன்பாட்டிற்கு LPG விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளதால், உணவங்களுக்கு LPG சிலிண்டர் கிடைக்காமல் மூடப்படும் சூழல் உள்ளது.

மேலும், பல ஆட்டோக்களும் டீசல்கள் கிடைக்காமல் இயக்கத்தை நிறுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
தொலை தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை
இந்த சூழலில் LPG தடைபட்டால் இணைய சேவையிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தொலை தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.
பல மொபைல் கோபுரங்கள் மின் தடைகளின் போது செயல்பாடுகளைப் பராமரிக்க டீசல் ஜெனரேட்டர்களைச் சார்ந்துள்ளன.

மார்ச் 5 ஆம் திகதி முதல் தொலைத்தொடர்பு கோபுர உற்பத்தியாளர்களுக்கு எல்பிஜி விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தட்டுப்பாடு தொடர்ந்தால் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு உற்பத்தியைப் பாதிக்கலாம் என்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கம் (DIPA) எச்சரித்துள்ளது.
கோபுர உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கால்வனைசேஷன் செயல்பாடுகள் பெரும்பாலும் LPG அல்லது LNG இயக்கப்படும் செயல்பாடுகளாக இருப்பதால், LPG விநியோகங்களை நிறுத்தி வைப்பது கோபுர உற்பத்தி அலகுகளுக்கு கடுமையான செயல்பாட்டு சவாலை உருவாக்கியுள்ளது.
புதிய கோபுரங்களை நிறுவுவதில் ஏற்படும் ஏதேனும் தாமதங்கள், உள்கட்டமைப்பு குறைவாக உள்ள பகுதிகளிலோ அல்லது ஏற்கனவே உள்ள நெட்வொர்க்குகள் அதிக தேவை உள்ள பகுதிகளிலோ நெட்வொர்க் கவரேஜை விரிவுபடுத்துவதற்கும் இணைப்பை மேம்படுத்துவதற்கும் எடுக்கும் முயற்சிகளைப் பாதிக்கலாம்.
ஆனால், இதனால் தற்போது உடனடி இணைய சேவையில் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளன.
ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள்
இதே போல், சர்வதேச இணைய போக்குவரத்தின் பெரும்பகுதி செயற்கைக்கோள்கள் வழியாக அல்லாமல் கடல் தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் வழியாகவே நகர்கிறது.

இந்தியாவின் மேற்கு நோக்கிய இணைய போக்குவரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஹார்மோஸ் நீரிணை வழியாக அல்லது அருகிலுள்ள பரந்த வளைகுடா பகுதி வழியாக செல்கிறது.
SEA-ME-WE 4 (SMW4), I-ME-WE (IMEWE) மற்றும் Flag Telecom இன் FALCON போன்ற அமைப்புகள் இந்த பிராந்தியத்தின் மூலம் இந்தியாவை உலகளாவிய நெட்வொர்க்குகளுடன் இணைக்கின்றன.
கடலில் ஏற்படும் விபத்துக்கள், மோதல் பகுதிகளில் நீருக்கடியில் ஏற்படும் வெடிப்புகள் அல்லது கடற்படை நடவடிக்கைகள் கேபிள் பாதைகளை சீர்குலைக்கும்.
கேபிள்கள் சேதமடைந்தால், பாதிக்கப்பட்ட பகுதியைக் கண்டறிந்து சரிசெய்ய சிறப்பு பழுதுபார்க்கும் கப்பல்கள் பொதுவாக அனுப்பப்படும்.

தற்போதைய போர் சூழல் காரணமாக பழுது பார்க்கும் கப்பல்களை அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது.
கேபிள்களை விரைவாக சரிசெய்ய முடியாவிட்டால், நெட்வொர்க் திறன் படிப்படியாக குறையும். பல கேபிள்கள் வழக்கமான தேய்மானம் அல்லது தற்செயலான சேதத்தை அனுபவிப்பதால், மீதமுள்ள செயல்பாட்டு கேபிள்கள் அதிக சுமையை அடைகின்றன. போர் காரணமாக பராமரிப்பு பணியும் தடைபடும்.

இது கூடுதல் நெட்வொர்க் தாமதம், நெரிசல் அல்லது முழுமையான சேவை இடையூறுகளுக்கு வழிவகுக்கும்.
செங்கடலில் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, புதிய கேபிள்கள் சமீபத்தில் ஹார்மோஸ் நீரிணையை ஒரு பாதுகாப்பான மாற்றாகக் கருதப்பட்டது.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்தியா-ஐரோப்பா-எக்ஸ்பிரஸ் (IEX) மற்றும் கூகிளின் ப்ளூ-ராமன் போன்றவை தற்போது இந்த வழித்தடத்திற்கான கட்டுமானத்தில் உள்ளன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |