தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகனுமா? அப்போ இந்த அற்புத மருந்தை காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வாங்க!
பொதுவாக தைராய்டு பிரச்சனை என்பது, இப்போது பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கின்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
கழுத்துப்பகுதியில் என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையே தைராய்டு எனப்படுகிறது.
இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும்.
இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது நல்லது. அந்தவகையில் தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- பச்சை வால்நட்ஸ் - 40
- தேன் - 1 கிலோ
செய்முறை
வால்நட்ஸ் காயை துண்டுகளாக்கி கண்ணாடி பாட்டிலில் போட்டு, அதில் தேன் ஊற்றி, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
முக்கியமாக இந்த பாட்டிலை பகலில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் வைத்து, அவ்வப்போது பாட்டிலைக் குலுக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து, அதில் உள்ள வால்நட்ஸ் காயை நீக்கிவிட வேண்டும்.
இந்த தேனை தினமும் காலை மற்றும் மாலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர, தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும்.
இதர நன்மைகள்
- இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் உட்கொண்டு வந்தால், சீக்கிரம் இரத்த சோகை நீங்கும்.
- பச்சை வால்நட்ஸை தேனில் ஊற வைத்து, அந்த தேனை தினமும் சாப்பிடும் போது கல்லீரல், வயிறு மற்றும் இரத்தம் சுத்தமாகும்.
- அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், இதை சாப்பிட்டால் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.
-
மாதவிடாய் காலத்தில் அதிக பிரச்சனையை சந்திக்கும் பெண்கள், பச்சை வால்நட்ஸ் ஊற வைத்த தேனை சாப்பிட்டால், பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
-
தேன் சுவாச பாதை மற்றும் மூச்சுக் குழாயில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.