கொரியன் பெண்களை போல் கண்ணாடி கன்னத்தை பெற இந்த 2 பொருள் போதும்...!
பொதுவாகவே பெண்களுக்கு அழகாக இருக்க வேண்டும் என்பது ஒரு ஆசையாக இருக்கும்.
ஒவ்வொரு நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் சருமமானது வேறுப்பட்டு காணப்படும்.
ஆனால் பொதுவாக பலரும் விரும்புவது கொரியன் பெண்களின் சருமத்தை தான்.
காரணம், கொரியன் பெண்களின் சருமமானது பளிச்சென்று இருக்கும். முகத்தில் எந்தவொரு புள்ளியும் இல்லாமல் தெளிவாக இருப்பார்கள்.
அது அவர்களின் மரபியல் சார்ந்த விடயமாக இருப்பதில்லை. அதற்காக பின்பற்றும் ஆரோக்கிய முறை தான் முக்கியம்.
எனவே நீங்கள் எப்போதும் இளமையுடனும் முகம் பளிச்சென்றும் இருக்க கொரியன் பெண்கள் செய்யும் முறையை வீட்டில் செய்து பார்க்கவும்.
தேவையான பொருள்கள்
-
பன்னீர்
- முல்தானி மெட்டி
செய்ய வேண்டியவை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் முல்தானி மெட்டியை சேர்த்துக்கொள்ளவும்.
- பின் அதில் 3 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவவும்.
- அதை அப்படியே 20 நிமிடங்களுக்கு முகத்தில் காய விடவும்.
- 20 நிமிடம் கழித்து பருத்தி மற்றும் தண்ணீரின் உதவியுடன் முக சருமத்தை சுத்தம் செய்யவும்.
- இதை வாரத்திற்கு 3 முறை உங்கள் சருமத்திற்கு செய்து வந்தால் போதும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |