ஆபத்தான ஒமிக்ரான் வைரசில் இருந்து தப்பிப்பது எப்படி? நிபுணர்கள் கொடுத்த ஆலோசனை
உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரசில் இருந்து தற்காத்து கொள்ள நிபுணர்கள் சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலக முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. சீனாவில் தோன்றிய கொரோனாவை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது கொரோனாவில் இருந்து உருமாறி வந்துள்ள நிலையில் இதற்கு ஒமிக்ரான் என்று உலக சுகாதாரத்துறை பெயர்சூட்டியுள்ளது. இதனை பரிசோதித்த நிபுணர்கள் இது கோவிட் 19 போல அதிக அபாயம் கொண்டது அல்ல.. மிகுந்த குறைந்த செயல்திறனையே இந்த வைரஸ் பெற்றுள்ளது என்கிறார்கள்.
ஒமிக்ரானின் அறிகுறிகளைக் கொண்டிருந்த ஏழு நோயாளிகளை பரிசோதித்ததில் பெரும்பாலான நோயாளிகள் மிகவும் லேசான அறிகுறிகளையே கொண்டுள்ளார்கள். இதனால் ஓமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனைக்கு செல்ல தேவை இல்லை. வீட்டில் இருந்தே சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவரும், மருத்துவருமான ஏஞ்சலிக் கோட்ஸி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். ஓமிக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் வாசனை மற்றும் சுவையை இழப்பதில்லை.
அதேபோல ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்படுவதில்லை. 40 வயது மற்றும் அதற்கு கீழ் இருக்கும் வயதினரை இது பாதிக்கிறது. ஓமிக்ரான் பாதித்தவர்களுக்கு முதல் இரண்டு நாட்களுக்கு கடுமையான உடல் சோர்வு மற்றும் தலைவலி ஏற்படுகிறது என்று கூறினார்.
எனவே ஒமிக்ரானின் வீரியம் குறைவாக உள்ளதால் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதால் இதனை எளிதாக வென்றுவிடலாம் என்று கூறியுள்ளார்.