நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த மூலிகை டீ! எப்படி தயாரிப்பது ?
increase Immunity
Herbal Tea
By Balakumar
சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
- இஞ்சி - 1 கப்
- கிராம்பு, பட்டை - 10
- அன்னாசிப்பூ -5
- ஏலக்காய் - 5கிராம்
- துளசி - ஒரு கைப்பிடி
- மிளகு - 5 கிராம்
- அதிமதுரம் - 2 ஸ்பூன் அளவு
- அஸ்வகந்தா - 1/4 ஸ்பூன்
செய்முறை:-
- இஞ்சியை தோல் சீவி தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பிறகு அதை வெயிலில் தண்ணீர் உலரும் வரை காய வைக்கவும்.
- துளசியை தண்ணீரில் அலசி அதையும் நன்றாக வெயிலில் உலர விட வேண்டும்.
- பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் மிளகு மற்றும் ஏலக்காயை வறுத்து கொள்ளவும்.
- அடுத்து அதில் வெயிலில் உலர்ந்த இஞ்சி, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகிவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
- வறுத்த கலவையை ஆறவைத்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
- பிறகு அரைத்த பொடியில் அதிமதுரம் மற்றும் அஸ்வகந்தா பொடியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
-
இதை தினமும் காலையில் குடிக்கும் தேநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு எந்த வித நோயும் அண்டாது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US