பொலிவான சருமத்தை பெற உருளைக்கிழங்கை இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை பராமரிப்பதற்காக சிறந்த முறையை கையாளுவதில்லை.
கோடைக் காலம் தொடங்கிவிட்டால் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பது மிகப்பெரிய சவலாகும்.
இவ்வாறான சூழ்நிலையில் சருமத்தை எப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பாதுக்காக்கலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருள்கள்
-
1 கிண்ணம் உருளைக்கிழங்கு தோல்கள்
- 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
செய்முறை
-
முதலில் உருளைக்கிழங்கின் தோல்கள் மீது கற்றாழை ஜெல் தடவி ஒரு மணிநேரத்திற்கு அப்படியே விடவும்.
- பின்னர் அந்த தோல்களை சருமத்தில் ஒட்டி அப்படியே முகத்தை மூட வேண்டும்.
-
அடுத்து 2 முதல் 5 நிமிடங்களுக்கு அதை அப்படியே முகத்தில் வைத்திருக்கவும்.
- இதை தினமும் செய்து பார்ப்பதன் மூலம் வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க முடியும்.
குறிப்பு:
சருமத்தில் முகப்பரு இருந்தால் இதை முயற்சித்து பார்க்கக் கூடாது.
உங்களுடைய சருமம் உணர்திறன் மிக்கதாக இருந்தால் வைத்தியரிடம் அறிவுரை கேட்டு முயற்சிப்பது நல்லது.
முகத்தில் ஏதேனும் லேசர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |