உடல் கருகி கொத்தாக கொல்லப்பட்ட மக்கள்... வெளிவரும் பகீர் புகைப்படங்கள்
முதற்கட்ட தகவலில் சுமார் 35 பேர் இறந்திருக்கலாம் என கூறப்பட, தற்போது 41 பேர்கள் என தகவல்
மின்சார இணைப்பால் ஏற்பட்ட தீ விபத்து என்றே முதற்கட்ட விசாரணையில் தகவல்
எகிப்தில் தேவாலயம் ஒன்று தீ விபத்தில் சிக்கிய நிலையில், ஆராதனையில் ஈடுபட்டிருந்த பெருந்திரளான மக்கள் மரணமடைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தின் போது சுமார் 5,000 மக்கள் ஆராதனையில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் 45 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும், அவர்கள் காஸா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
@eyewitness
மின்சார இணைப்பால் ஏற்பட்ட தீ விபத்து என்றே முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இம்பாபா பகுதியில் உள்ள அபு சிபின் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து கூட்ட நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தீ விபத்தில் சிக்கி கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் சிறார்கள் என்றே அஞ்சப்படுகிறது. மேலும், மூன்றாவது மற்றும் நான்காவது மாடியில் மக்கள் கூடியிருந்ததாகவும், இரண்டாவது மாடியில் இருந்து புகை வருவதைக் கண்டதாகவும் நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
@Mete
இதனையடுத்து பீதியில் மக்கள் படி வழியாக தப்பிக்க முயற்சிக்கவும், அதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
கிறிஸ்தவ மக்களின் புனிதமான நாட்களில் ஒன்றான மரியாவின் விண்ணேற்பு விழாவைக் குறிக்க வழிபாட்டாளர்கள் குறித்த தேவாலயத்தில் திரண்டிருந்தனர். முதற்கட்ட தகவலில் சுமார் 35 பேர் இறந்திருக்கலாம் என கூறப்பட, தற்போது 41 பேர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
@Reuters