கப்பலில் வந்த அட்டைப்பெட்டிகளுடன் மனிதக் கால்கள்: வெளிநாடொன்றில் பரபரப்பு
அமெரிக்காவிலிருந்து தாய்லாந்துக்கு கப்பலில் வந்த அட்டைப்பெட்டிகளுடன் இரண்டு மனிதக் கால்கள் இருப்பதைக் கண்ட மறுசுழற்சி மையப் பணியாளர்கள் பொலிசாரை அழைத்தார்கள்.
கப்பலில் வந்த அட்டைப்பெட்டிகளுடன் மனிதக் கால்கள்
நேற்று முன்தினம், மதியம் 1.00 மணியளவில், தாய்லாந்திலுள்ள Chon Buri மாகாணத்திலுள்ள மறுசுழற்சி மையம் ஒன்றிற்கு அமெரிக்காவிலிருந்து கப்பல் ஒன்றில் அனுப்பப்பட்ட அட்டைப்பெட்டிகளை மையப் பணியாளர்கள் பரிசோதித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, நசுக்கப்பட்ட ஒரு அட்டைப் பெட்டியுடன் ஒரு ஷூ இணைந்திருப்பது தெரியவே, அதை எடுத்துப் பார்த்த பணியாளர்கள், அந்த ஷூ, அழுகிச் சிதைந்த மனிதக் கால் ஒன்றுடன் இணைந்திருப்பதைக் கண்டு உடனடியாக பொலிசாரை அழைத்துள்ளார்கள்.
Photo via Facebook/ ข่าวศรีราชาท้องถิ่น
பொலிசார் வந்து அந்த இடத்தை மேலும் சோதனையிடும்போது, இடுப்பு முதல் கால் வரையிலான மற்றொரு கால் எலும்பும் கிடைத்துள்ளது.
தடயவியல் அதிகாரிகள் சோதனை
அந்த மனித எலும்புகள் தாய்லாந்திலிருந்து வரவில்லை, அவை அமெரிக்காவிலிருந்து வந்தவை என்று கூறியுள்ள பொலிசார், அந்தக் கால்களுக்கு சொந்தக்காரரான நபர் ஒருவேளை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.
அவை யாருடைய கால்கள், அவை இரண்டும் ஒரே நபருடையதா என்பது போன்ற விவரங்களை அறிவதற்காக, அந்த எலும்புகளை தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |