கட்டுப்பாட்டை இழந்த ரோபோ - ஊழியர்களை ஆக்ரோஷமாக தாக்க முயன்றதால் பரபரப்பு
ரோபோடிக் துறையின் வளர்ச்சி பொதுமக்களின் அன்றாட வாழ்வில், பல்வேறு பயன்பாடுகளை எளிமைப்படுத்தினாலும், எதிர்காலத்தில் வேலை இழப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.
தாக்க முயன்ற ரோபோ
அதே போல், எதிர்காலத்தில் AI உதவியுடன் ரோபோ தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படும் போது மனிதர்கள் மீது ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தும் என்ற சந்தேகமும் மக்களிடையே உள்ளது.
இந்நிலையில், சீனாவில் உள்ள தொழிற்சாலையில் ரோபோ ஒன்று, ஊழியர்களை தாக்க முயன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சாலையில் Unitree H1(Universal Humanoid Robot) என அழைக்கப்படும் மனித உருவ ரோபோட்டை உருவாக்கும் பணியில் ஊழியர்கள் இருவர் ஈடுபட்டு இருந்தனர்.
Footage claimed to show a Unitree H1 (Full-Size Universal Humanoid Robot) going berserk, nearly injuring two workers, after a coding error last week at a testing facility in China. pic.twitter.com/lBcw4tPEpb
— OSINTdefender (@sentdefender) May 4, 2025
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ரோபோ, திடீரென அங்கிருந்தவர்களை ஆக்ரோஷமாக தாக்க முயன்றது. அப்போது அங்கிருந்து ஓடியவர்கள் பின்னர் மீண்டும் ரோபோவை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
ரோபோ ஒரு கிரேன் மூலம் கட்டப்பட்டிருந்ததால், அங்கிருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ரோபோக்களின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |