கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் வீசும் பிரபல ஐரோப்பிய நாடு! என்ன காரணம்?
பிரபல ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தடுப்பூசிகள் குப்பையில் வீசப்படுவதாக மூத்த மருத்துவர்களில் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான டோஸ் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதாக ஸ்வீடனின் மிக மூத்த மருத்துவர்களில் ஒருவரான Johan Styrud ஒப்புக்கொண்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட டான்டரிட் மருத்துவமனையின் ஆலோசகர் Johan Styrud கூறியதாவது, பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலைகள் காரணமாக கடைசி நேரத்தில் பல நோயாளிகள் தடுப்பூசி போட முன்பதிவு செய்ததை ரத்து செய்கிறார்கள்.
சுவீடன் தற்போது 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மட்டுமே வழங்குகிறது.
மக்கள் நோய்த்தடுப்புக்கான வாய்ப்பை நிராகரிப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இந்த வயதினருக்கு தடுப்பூசியால் பாதிப்புகள் ஏற்பட மிக குறைவான வாய்ப்பே உள்ளது என Johan Styrud வலியுறுத்தியுள்ளார்.