மதகுருக்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நுற்றுக்கணக்கான பெண்கள்! ஜேர்மன் தேவாலயம் குறித்து வெளிவந்த அதிர்ச்சியூட்டும் அறிக்கை
ஜேர்மனியில் உள்ள ஒரு RCI திருச்சபையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 300-க்கும் மேற்பட்ட பெண்களை மதகுருக்கள் மற்றும் சபை ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக வெளியான அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் மிக சக்திவாய்ந்த கத்தோலிக்க மறைமாவட்டமான Cologne நகரில் உள்ள திருச்சபையில் இந்த கொடுமை நடந்துள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன ஆய்வில் இந்த உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து 800 பக்க அறிக்கையை ஆய்வுக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் 1975 மற்றும் 2018-க்கு இடையில் 202 குற்றவாளிகள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 314 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வரும் வாரங்களில் குற்றச்சட்டுகள் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.