மூச்சு விட முடியவில்லை... வெளியான காணொளி ஒன்றால் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்
ஹென்றி நோவாக்கின் கைது தொடர்பான காணொளி வெளியானதை அடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் காவல் நிலையம் ஒன்றை முற்றுகையிட்டுள்ளனர்.
இனவெறித் தாக்குதலுக்கு
சவுத்தாம்ப்டன் பகுதியில் சீக்கிய இளைஞரால் 18 வயதான ஹென்றி நோவாக் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது விக்ரம் திக்வா என்ற 23 வயது இந்திய வம்சாவளி சீக்கியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

18 வயதான ஹென்றி நோவாக், சவுத்தாம்ப்டனில் நண்பர்களுடன் மாலைப் பொழுதைக் கழித்துவிட்டு வீட்டிற்கு நடந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, விக்ரம் திக்வா அவரை 21 சென்டிமீற்றர் நீளமுள்ள கத்தியால் தாக்கியுள்ளார்.
கத்திக்குத்து சம்பவத்திற்குப் பிறகு, திக்வா இனவெறித் தாக்குதலுக்கு ஆளானதாகக் காவல்துறையிடம் பொய் சொன்னார். தனது தலைப்பாகை தட்டிவிடப்பட்டதாகவும், அதனால் தனக்குக் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் காவலர்களிடம் கூறினார்.
ஆனால் நீதிமன்ற விசாரணையில், திக்வா பொய் சொன்னது உறுதி செய்யப்பட்டது. சவுத்தாம்ப்டன் கிரவுன் நீதிமன்ற நீதிபதி வில்லியம் மௌஸ்லி தெரிவிக்கையில், திக்வா ஒரு பெரிய கத்தியால் நோவாக்கைக் கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹென்றி இன ரீதியாக எதுவும் கூறவில்லை எனவும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், நீங்கள் உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் மதத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டீர்கள் என திக்வா குறித்து நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 2025 டிசம்பர் மாதம் சம்பவத்தன்று திக்வா சொன்ன பொய் காரணமாக பொலிஸார் ஹென்றியைக் கைது செய்யும் காணொளி தற்போது வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட வேண்டும்
நோவாக்கைக் கைது செய்த அதிகாரி ராஜினாமா செய்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மக்கள் தற்போது சவுத்தாம்ப்டன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
நோவாக் கைது செய்யப்படும் போது தன்னால் மூச்சு விட முடியவில்லை என கூறியது, அந்தக் காணொளியில் பதிவாகியிருந்தது. இதையே, காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்களும் மூச்சு விட முடியவில்லை என முழக்கமிட்டனர்.

கொலை மற்றும் பொது இடத்தில் கத்தி வைத்திருந்த குற்றங்களுக்காகத் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திக்வா தற்போது குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் சிறைத்தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பொலிசார் கைது செய்யப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பவயிடத்தில் நோவாக் இறக்கும் முன்னர் 9 முறை தம்மால் மூச்சுவிட முடியவில்லை என பொலிசாரிடம் கூறுகிறார்.
ஆனால் அவர்கள் கேலி செய்வதும், அதன் பின்னர் சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுப்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |