பிரான்சில் கொடூரச் செயலை செய்து விட்டு சிறிய படகில் பிரித்தானியாவுக்குத் தப்பிய குழு
பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற பிறகு, புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று பிரித்தானியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
டெர்மினஸ் கடற்கரையில்
கொடிய தாக்குதல் நடந்த சில மணிநேரங்களிலேயே, சந்தேக நபர்கள் ஒரு சிறிய படகில் பிரித்தானியாவுக்கு வந்திருக்கக்கூடும் என்பது அதிர்ச்சியளிப்பதாக அரசியல்வாதிகள் நேற்று இரவு தெரிவித்தனர்.

பிரான்சின் பிரபலமான கடற்கரை நகரமான பெர்க்-சுர்-மெரில் உள்ள டெர்மினஸ் கடற்கரையில் வியாழக்கிழமையன்று ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
பாதிக்கப்பட்ட அந்த நபர் 20 வயது கடந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், மணல் மேடுகள் நிறைந்த பகுதியில் மற்ற புலம்பெயர்ந்தோரால் தாக்கப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், எந்தவித ஆவணங்களும் இல்லாத அந்த ஆணின் அடையாளத்தையும், அவர் பூர்வீகமாக எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதையும் கண்டறிய பிரெஞ்சு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த அதே கடற்கரையிலிருந்து சாதனை அளவாக 165 புலம்பெயர்ந்தோருடன் ஒரு படகு புறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அந்தப் படகில் இருந்தவர்களுக்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்காக, பின்னர் டோவருக்கு (Dover) அழைத்துச் செல்லப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பொலிசாருக்கு எச்சரிக்கை
பிரெஞ்சு விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கையில், அங்கு கடுமையான வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டதாகவும், குறைந்தது ஒருவர் இளைஞர் ஒருவரைக் கத்தியால் தாக்கியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த பல மணிநேரங்களுக்குப் பிறகு, பிற்பகலில், அந்த இளைஞரின் சடலத்திற்கு அருகில் ஒரு கத்தியும் மீட்கப்பட்டுள்ளது. இதற்குள், இதற்குப் பொறுப்பானவர்கள் படகில் ஏறி பிரித்தானியாவுக்குத் தப்பிச் சென்றதாக பிரான்ஸ் அதிகாரிகள் தரப்பில் நம்பப்படுகிறது.

பிரித்தானியாவில் உள்ள பொலிசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய குற்றவியல் முகமை பிரெஞ்சு காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அறியப்படுகிறது.
இந்த ஆண்டில் இதுவரை, பிரித்தானியாவில் தஞ்சம் கோருவதற்காகச் சிறிய படகுகள் மூலம் 13,000-க்கும் சற்று அதிகமானோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |