சூனியம் வைத்து கொல்லப்பட்ட பிக்பாஸ் நடிகை? கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு
பிக்பாஸ் பிரபலம் சூனியம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஷெபாலி ஜரிவாலா
2002 ஆம் ஆண்டில் வெளியான காந்தலாகா பாடல் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ஷெபாலி ஜரிவாலா(shefali jariwala).

ஒரு ஹிந்தி மற்றும் கன்னட படத்தில் நடித்துள்ள இவர், 13வது ஹிந்தி பிக்பாஸ் தொடரில் பங்குபெற்றதன் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றார்.
2004 ஆம் ஆண்டில் ஹர்மீத் சிங் என்ற இசையமைப்பாளரை திருமணம் செய்த இவர், குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2008 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்.

அதன் பின்னர், 4 ஆண்டுகளாக உறவில் இருந்த நடிகர் பராக் டயாகி(Parag Tyagi) 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் ஜூன் 27 ஆம் திகதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஷெபாலி முதுமையடைவதை தடுப்பதற்கான ஊசியை பயன்படுத்தியதாகவும், மேலும் அன்று பூஜைக்காக அவர் உண்ணாவிரதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கணவர் குற்றச்சாட்டு
அவரது மரணத்திற்கான காரணம் மர்மமாக உள்ள நிலையில், தனது மனைவியை சிலர் சூனியம் வைத்து கொன்றுள்ளதாக ஷெபாலியின் கணவர் பராக் டயாகி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "கடவுள் உள்ள உலகில் பிசாசும் உள்ளது. மகளின் தங்களின் துன்பங்களை விட பிறரின் மகிழ்ச்சியை பார்த்து அதிக துன்பமடைகிறார்கள்.
என் மனைவி ஷெபாலிக்கு யார் சூனியம் வைத்தார்கள் என்பது எனக்கு தெரியும்.ஆனால் என்னால் வெளியே சொல்ல முடியாது.
எங்களுக்கு 2 முறை சூனியம் வைத்தார்கள். முதல்முறை எங்களால் சமாளிக்க முடிந்தது. அதில் இருந்து தப்பி விட்டோம். 2வது முறை மிக பலமாக சூனியம் வைக்கப்பட்டுள்ளது. என்னால் ஏதோ தவறாக நடப்பதை 100% உணர முடிந்தது" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |