திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன்
உத்தரப்பிரதேசத்தில், திருமணமான ஒரே வாரத்தில் மணமகள் ஒருவர் தன் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
அந்த மணமகனோ, நல்லவேளை நான் தப்பித்தேன் என்று கூறியுள்ளார்!
திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் (23) என்பவருக்கு மே மாதம் 17ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
மாமியார் வீட்டில் ஒரு வாரம் தங்கிய மணமகள், பின்னர் தன் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். அதற்குப் பிறகு அவர் தன் கணவர் வீட்டுக்குத் திரும்பாததால் மனைவியைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார் சுனில்.
இந்நிலையில், நேற்று பொலிஸ் நிலையம் ஒன்றிற்கு வந்துள்ளார் அந்தப் பெண்.
தனக்கு ஒரு காதலர் இருப்பதாகவும், தான் தன் காதலர் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும், அவருடன் வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார் அந்தப் பெண்.
பொலிசார் இரு வீட்டாரையும் வரவழைக்க, அவர்கள் கொடுத்த நகைகள், பணம் முதலானவற்றை இருதரப்பும் திருப்பிக்கொடுக்கவும், மணமகனும் மணமகளும் பிரியவும் சம்மதம் தெரிவித்து இரு வீட்டாரும் பிரிந்து சென்றுள்ளார்கள்.
இந்நிலையில், தான் தன் மனைவியுடன் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள நைனிதாலுக்கு தேனிலவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், நல்ல வேளையாக, மத்தியப்பிரதேசத்தில் மனைவியால் கொல்லப்பட்ட ராஜா ரகுவன்ஷியின் நிலைமைபோல தன் நிலை முடிவடையாததால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சுனில்.
அவளும் தன் காதலனுடன் சந்தோஷமாக வாழ்கிறாள், என் வாழ்க்கையும் நாசமாகவில்லை, எல்லோருக்கும் சந்தோஷம் என்கிறார் சுனில்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |