தேனிலவில் கொல்லப்பட்ட மணமகன் வழக்கு: மந்திரவாதம் செய்ததாக குற்றச்சாட்டு
மேகாலயாவில் தேனிலவுக்குச் சென்ற மணமகனை அவரது மனைவியே ஆள் வைத்துக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில், அந்தப் பெண் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் மணமகனின் தந்தை.
மந்திரவாதம் செய்ததாக குற்றச்சாட்டு
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.
தேனிலவின்போது, ராஜா கொல்லப்பட்டார். அவரது கொலை தொடர்பாக சோனம், அவருடைய காதலர் என கருதப்படும் ராஜ் குஷ்வாஹா, அவரது நண்பர்களான விஷால் சௌகான், ஆனந்த் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகிறார்கள்.
[IZGZVCM ]
இந்நிலையில், திருமணமாகி வீட்டுக்கு வந்ததும், ராஜா கையில் சிறு பொட்டலம் ஒன்றைக் கொடுத்த சோனம், அதை வீட்டு வாசலில் கட்டுமாறு கூறியிருக்கிறார்.
அது கண் திருஷ்டிக்காக என அவர் கூறியுள்ளார். ஆனால், ராஜா கொல்லப்பதையடுத்து, அது தன் மகன் மீது சோனம் செய்த மந்திரவாதம் என்கிறார் ராஜாவின் தந்தையான அஷோக் ரகுவன்ஷி.
அந்த பொட்டலத்தை இப்போது தாங்கள் அகற்றிவிட்டதாக தெரிவிக்கிறார் அவர்.
அதேபோல, திருமணமாகி வெறும் நான்கு நாட்கள்தான் கணவன் வீட்டில் தங்கினாராம் சோனம்.

தேனிலவுக்குச் சென்ற மணமகன் கொல்லப்பட்ட வழக்கு: தான் கொல்லப்படப்போவது தெரியாமல் நடந்து செல்லும் காட்சி
அவளை நான் மனதார அவளுடைய வீட்டுக்கு அனுப்பிவைத்தேன் என்று கூறும் ராஜாவின் தாயான உமா, அவளைப் பார்த்தால் ஒரே ஒரு கேள்வி கேட்கவேண்டும், என் மகனை ஏன் கொன்றாய் என்று அவளிடம் கேட்கவேண்டும் என்கிறார்.
விடயம் என்னவென்றால், பொலிஸ் விசாரணையில், இதுவரை, எதற்காக ராஜா கொல்லப்பட்டார் என்பதற்கான காரணம் தெரியவரவேயில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |