தேனிலவுக்குச் சென்ற மணமகன் கொல்லப்பட்ட வழக்கு: தான் கொல்லப்படப்போவது தெரியாமல் நடந்து செல்லும் காட்சி
மேகாலயாவில் தேனிலவுக்குச் சென்ற மணமகனை அவரது மனைவியே ஆள் வைத்துக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
புதுமணத்தம்பதி மாயம்
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.
மே மாதம் 23ஆம் திகதி தம்பதியர் திடீரென மாயமானார்கள். பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை ராஜாவின் உயிரற்ற உடல் Weisawdong நீர்வீழ்ச்சியின் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், சோனமுடைய காதலர் என கருதப்படும் ராஜ் குஷ்வாஹா, அவரது நண்பர்களான விஷால் சௌகான், ஆனந்த் குமார் மற்றும் ஆகாஷ் ராஜ்புத் ஆகியோர் உதவியுடன் ராஜாவைக் கொல்ல சோனம் ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியானது.
சோனம், ராஜ் குஷ்வாஹா, அவரது நண்பர்களான விஷால் சௌகான், ஆனந்த் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
வெளியாகியுள்ள வீடியோ
இந்நிலையில், சோனமும் ராஜாவும் ட்ரெக்கிங் செல்வதைக் காட்டுவதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவை எடுத்த நபர் தானும் ட்ரெக்கிங் சென்றிருந்த நிலையில், தான் தற்செயலாக அந்த வீடியோவை எடுத்ததாகவும், அந்த வீடியோவிலிருக்கும் பெண் அணிந்துள்ள சட்டையும், ராஜா சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கிடைத்த சட்டையும் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை இன்னமும் உறுதி செய்யப்படாத நிலையிலும், அது வைரலாகியுள்ளது. இதுவரை 4.8 மில்லியன் முறை அது பார்வையிடப்பட்டுள்ளது.
வீடியோவைப் பார்வையிட்டவர்கள், சோனமுக்குப் பின்னால், தான் சிறிது நேரத்தில் தன் மனைவி ஏற்பாடு செய்தவர்களாலேயே கொல்லப்படப்போவது தெரியாமல் ராஜா நடந்து செல்வதைக் கண்டு வருத்தமடைந்துள்ளதாகவும், சோனம் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கருத்துக்கள் தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |