பிரித்தானிய பிரதமராவது என்னுடைய தர்மம்: ரிஷி சுனக் பளிச் பதில்
பிரித்தானியாவின் பிரதமராவது என்பது என்னுடைய தர்மம் என்று உணர்ந்தேன் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா பிரதமர் ரிஷி சுனக்
கோவிட் ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, பிரித்தானிய பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து வெளியுறவு செயலாளராக செயல்பட்டு வந்த லிஸ் ட்ரஸ், பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Rishi Sunak says Dharma in Hinduism inspired him to work hard for the people of UK as as PM pic.twitter.com/aAZchToj8b
— Sanatani Thakur ?? (@SanggitaT) February 4, 2023
ஆனால் அவரது தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் வளர்ச்சி சரிவை சந்திக்க தொடங்கியதை அடுத்து அவரும் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெற்றி பெற்று, பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றார்.
பிரதமராவது என்பது என்னுடைய தர்மம்
இந்நிலையில் ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்று 100 நாட்களை கடந்து உள்ளதை அடுத்து, பியர்ஸ் மோர்கன் Uncensored-க்கு வியாழக்கிழமை ரிஷி சுனக் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ஐரோப்பாவில் போர் நடைபெற்று கொண்டு இருக்கும் போது, பவுண்ட் மதிப்பு தொங்கி கொண்டு இருக்கும் போது, பிரித்தானியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டு இருக்கும் போது, பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக் ஆக வேண்டியதற்கான காரணம் என்னவென்று கேட்கப்பட்டது.
Reuters
இதற்கு பதிலளித்த ரிஷி சுனக், நான் அரசியலாக எண்ணிப் பார்க்கவில்லை லிஸ் ட்ரஸ் பதவி விலகிய போது, நான் அதிலிருந்து கடந்து சென்றேன், நான் பொது சேவை நம்பினேன் மற்றும் எல்லாவற்றையும் விட கடமை உணர்வு உணர்ந்தேன் என தெரிவித்தார்.
அத்துடன், இந்து மதத்தில் இது தர்மம் என்று அழைக்கப்படுகிறது, இதனை மொழிமாற்றம் செய்தால் கடமை என்று பொருள், இதனடிப்படையில் தான் நான் வளர்க்கப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.
இவை உங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதை நீங்கள் செய்து முடிப்பது மற்றும் சரியானவற்றை செய்ய முயற்சிப்பதை குறிப்பதாகும். அவை மோசமான கனவுகளில் வரும் வேலைகளாக இருந்தாலும் கூட என்று தெரிவித்துள்ளார்.
என்னால் மாற்றத்தை கொண்டு வர முடியும், மேலும் இந்த தருணத்தில் மாற்றத்தை உருவாக்க சிறந்த நபர் நான் தான் என்று உணர்ந்தேன், எனவே மக்கள் சமாளிக்கும் சவால்களை ஏற்றுக் கொள்ள என்னை நானே முன்னிலைப்படுத்தி கொண்டேன் என பதிலளித்துள்ளார்.