ஹனி மூன் கூட போகலங்க... 45 வயதில் திருமணம் முடிந்த கையோடு வந்துட்டேன்: அமமுக வேட்பாளரின் வாக்குறுதி
திருமணம் முடிந்த கையோடு தேர்தல் பிரச்சாரத்தில், ஈடுபட்டுளளதால் மனைவியிடம் சரியாக கூட பேசமுடியவில்லை என்று அமமுக கட்சியின் வேட்பாளர் கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், தினகரன் தலைமையிலான அமமுக கட்சி, போட்டியிடுகிறது. தமிழகத்தில் தேமுதிகவுடன் சேர்ந்து களம் காணுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி மங்கலம் தொகுதியில் அமமுக வேட்பாளராக முரளிதரன் என்பவர் போட்டியிடுகிறார்.
45 வயதான இவருக்கு கடந்த பெப்ரவரி மாதம் 3-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. சமூக சேவை மற்றும் அரசியலில் ஈடுபட்டதால் நிறைய வரன்கள் தடைபட்டது.
மார்ச் 18-ஆம் திகதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 19-ஆம் திகதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.அன்று முதல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நான் வெற்றி பெற்றால் மக்களை தேடிச்சென்று சேவையாற்றுவேன். மக்கள் என்னை தேடி வர வாய்ப்பளிக்காமல் அவர்களை சென்று பார்ப்பேன்.
சின்ன வயதில் இருந்து அரசியல் தவிர வேறு எதுவும் தெரியாது. மக்களுக்காக செயல்பட்டு வருகிறேன்.
வெற்றிபெற்றால் புதுச்சேரியின் முதன்மை தொகுதியாக வில்லியனூரை மாற்று. தன்னை எதிர்த்துப் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் உள்ளூர்க்காரர்கள் இல்லை என்று அவர் கூறினார்.
மேலும் திருமணம் முடிந்து மனைவியுடன் சரியாக கூட பேசவில்லை, தேன்நிலவுக்கு கூட செல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி விட்டேன்.
தான் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு முறையாக நேரடி நியமனம் மூலம் அரசு வேலை வாங்கித் தருவேன், அரசு துறையில் காலியாக உள்ள 9000 அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி முழுவதும் அனைத்து கிராமங்களிலும் தொகுதி அலுவலகம் வைத்து மக்களை நேரடியாக சந்திப்பேன்.
கிராமங்களில் தேவைக்கேற்ப கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும், சிறுவர்கள்- இளைஞர்கள்- முதியவர்கள் ஆகியோர் பயிற்சி பெற விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

