எனக்கு பயம் கிடையாது... நான் இங்கேதான் இருக்கிறேன்: இரகசிய மறைவிடத்திலிருந்து வெளியே வந்த உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் தலைநகர் Kyivஇல், பாதுகாப்பாக பங்கர் ஒன்றில் இதுவரை தங்கியிருந்த உக்ரைன் ஜனாதிபதியான Volodymyr Zelensky (44), தனது மறைவிடத்திலிருந்து வெளியே வந்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்குத் திரும்பிய Zelensky, நான் இங்குதான் இருக்கிறேன், நான் ஒளிந்திருக்கவில்லை, எனக்கு யாரைக் குறித்தும் பயம் இல்லை என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஊடகங்களுக்கு பேட்டிகள் அளித்தபோது, உரிமைகளும், சுதந்திரமும் மீறப்பட்டு நாங்கள் மிதிபடும்போது, நீங்கள் எங்களை பாதுகாக்கவேண்டும் என்று கூறிய Zelensky, இன்று எங்கள் நாட்டில் யுத்தம் நடக்கிறது, நாளை அது லிதுவேனியாவில் நடக்கும். பிறகு போலந்தில், அதற்குப் பிறகு ஜேர்மனியில் என்கிறார்.
புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமாட்டார் என்று கூறிய Zelensky, நாங்கள் முதலில், இரண்டாவது நீங்கள், ஏனென்றால், புடினுக்கு மேலும் மேலும் நாடுகள் வேண்டும் என்று கூறி மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார்.