இஸ்ரேலில் சைரன் ஒலி கேட்டதும் குழந்தையுடன் ஓடினேன்: இந்தியா திரும்பிய பயணி வேதனை
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் நடந்த விஷயங்கள் குறித்து இந்தியா திரும்பிய பயணிகள் பகிர்ந்துள்ளனர்.
இஸ்ரேலில் இருந்து திரும்பிய இந்தியர்கள்
கடந்த 7 -ம் திகதி முதல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
அதன்படி, இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இன்று காலை டெல்லிக்கு முதல் விமானம் வந்தது. இந்த விமானத்தின் மூலம் தாயகம் திருப்பிய 212 பேரை இந்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.
குழந்தையுடன் ஒடினேன்
இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து விமானம் மூலம் வந்த பெண் பயணி கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு சைரன் ஒலி கேட்டது. அதை கேட்டு தான் நாங்கள் எழுந்தோம். அப்போது தான் அது அபாய ஒலி என எங்களுக்கு புரிந்தது.
சைரன் ஒலி கேட்டதும் குழந்தையுடன் பதுங்கிடத்தை நோக்கி ஓடினேன். அது, சிறிது கஷ்டமாகவே இருந்தது. ஆனாலும், எப்படியோ சமாளித்து சென்றுவிட்டோம். இந்தியா திரும்பிய இந்த நேரத்தில் நான் நிம்மதியாக இருக்கிறேன். எங்களை பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி" என வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |