என் காதலியை கொன்றுவிடுவார்கள் என பயந்தேன்: இளவரசர் ஹரி பிரபல பத்திரிகை மீது குற்றச்சாட்டு
பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்றின்மீது இளவரசர் ஹரி உட்பட பிரபலங்கள் சிலர் வழக்குத் தொடுத்துள்ள நிலையில், சாட்சியமளிப்பதற்காக சமீபத்தில் பிரித்தானிய நீதிமன்றம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக திடீரென ஆஜரானார் ஹரி.
என்ன வழக்கு?
பிரபல பிரித்தானிய பத்திரிகையான Daily Mail பத்திரிகையை பிரசுரிக்கும் Associated Newspapers என்ற ஊடக நிறுவனம் மீது, பிரபல நடிகையான Liz Hurley, பாடகர் Sir Elton John மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
ஹரியைப் பொருத்தவரை, தனது மற்றும் தன்னுடைய நன்பர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அந்த ஊடகம் தலையை நுழைத்ததாக, தங்கள் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்டதாக, குற்றம் சாட்டியுள்ளார் அவர்.
sky news
என் காதலியைத் துன்புறுத்தி கொன்றுவிடுவார்கள் என பயந்தேன்
இளவரசர் ஹரியும், செல்சி டேவி (Chelsy Davy) என்னும் ஜிம்பாபே நாட்டவரான இளம்பெண்ணும் 2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை காதலித்துவந்தார்கள்.
அந்த காலகட்டத்தில், ஹரியும் டேவியும் எங்கு சென்றாலும், அங்கு அவர்களுக்கு முன்பாகவே பாப்பராஸி என்னும் புகைப்படக்காரர்கள் சென்று தயாராக காத்திருந்தார்கள்.
ஒருமுறை ஆப்பிரிக்காவுக்கு ஹரியும் டேவியும் விடுமுறையில் சென்றிருந்தபோது, டேவியின் பயண விவரங்கள் ஊடகங்களுக்கு யார் மூலமாகவோ கொடுக்கப்பட்டிருந்தன.
அதேபோல, இருவரும் ஒருமுறை அர்ஜெண்டினாவுக்குச் சென்றிருந்தபோது, டேவி தன் தோழி ஒருவரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அடுத்த நிமிடம், அவர்கள் தங்கியிருந்த இடத்தை புகைப்படக்காரர்கள் சூழ்ந்துகொண்டார்களாம்.
அந்த விடயம் டேவிக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாம். தான் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக, வேறு வார்த்தையில் சொன்னால், தான் வேட்டையாடப்படுவதாக எண்ணி டேவி நடுங்கிப்போனாராம். அதாவது, ஹரி மேகனுடைய தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து ஒற்றுக்கேட்கப்பட்டு வந்துள்ளன.
ஒருகட்டத்தில், தன் காதலி ஊடகங்களால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவார் என தனக்கு அச்சம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் ஹரி.
இவற்றின் பின்னால் Associated Newspapers என்ற ஊடக நிறுவனம் இருப்பதாகவும், அவர்கள்தான் சட்டவிரோதமாக ஆட்களை ஏற்பாடு செய்து, தங்களைக் குறித்த தகவல்களை இரகசியமாக பெற்று, தொலைபேசி உரையாடல்களை ஒற்றுக்கேட்டு, Daily Mail பத்திரிகையில் பிரசுரித்ததாக குற்றம் சாட்டியுள்ளார் ஹரி.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை Associated Newspapers ஊடக நிறுவனம் மறுத்துள்ளது.