நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன்... பிரபல நாட்டின் தலைவர்: காரணம் இதுதான்
ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
தனக்கு அதிக வயதாகிவிட்டதால், தான் ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதில்லை என மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
66 வயதாகும் மெர்க்கலிடம், நாட்டுக்கு ஒரு முன்னுதாரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
ஜேர்மனியில், பலர் தடுப்பூசி போட மறுத்துவருவதால், 1.2 மில்லியன் டோஸ் தடுப்பூசி பயன்படுத்தப்படாமல் கிடங்குகளிலேயே வைக்கப்பட்டுள்ள நிலையில், மெர்க்கலிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
அரசின் ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி, 65 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு ஜேர்மனியில் உள்ளது.
அதன்படி, தனக்கு 66 வயதாகிவிட்டதால், தடுப்பூசி போட தான் தகுதியானவள் அல்ல என்பதாலேயே தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளார் மெர்க்கல்.