இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்து: விமானிகள் உயிரிழந்ததாக தகவல்
ராஜஸ்தானின் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தானின் சூரத்கர்ஹ் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம், இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1.25 மணிக்கு, சுரு மாவட்டம் பானோடா கிராமம் அருகே விபத்துக்குள்ளானது.
அதிலிருந்த இரு விமானிகளும் கடுமையாக காயமடைந்துள்ளதாக இந்திய விமானப்படை X தளத்தில் தெரிவித்துள்ளது.
ஆனால் இருவரும் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இது மூன்றாவது ஜாகுவார் விபத்து ஆகும். மார்ச் 7 அன்று ஹரியானாவின் பஞ்ச்குலா அருகிலும், ஏப்ரல் 2 அன்று குஜராத்தின் ஜாம்நகரில் வேறொரு விபத்தும் ஏற்பட்டிருந்தது.
இந்த ஜாகுவார், இரண்டு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானமாகும். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களை விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பியுள்ளது.
ஜாகுவார் விமானம், இந்திய விமானப்படையில் பழமையானது என்றாலும், அதில் தொடர்ந்து மேம்பாடுகள் செய்யபட்டு, சுமார் 120 விமானங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
An IAF Jaguar Trainer aircraft met with an accident during a routine training mission and crashed near Churu in Rajasthan, today. Both pilots sustained fatal injuries in the accident. No damage to any civil property has been reported.
— Indian Air Force (@IAF_MCC) July 9, 2025
IAF deeply regrets the loss of lives and…
ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட ஜாகுவார் விபத்தில், விமானிகள் சித்தார்த் யாதவ் மற்றும் ஒருவரும் இருந்தனர். யாதவ், தனது சக விமானியை பாதுகாக்க முயன்றபோது உயிரிழந்தார்.
மார்ச் 7 அன்று அம்பாலா விமான தளத்திலிருந்து புறப்பட்ட ஜாகுவார் விமானம், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. அந்த விமானி, விமானத்தை மக்கள் பகுதிக்கு தவிர்த்து மாற்றிய பிறகு பாதுகாப்பாக வெளியேறும் நடவடிக்கையை மேற்கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |