பிரித்தானிய போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ள இந்திய விமானப்படை
இந்தியா மற்றும் பிரித்தானியா இடையிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், பிரித்தானிய அதிவேக ஜெட் விமானிகளுக்கு இந்திய விமானப்படை பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.
அதன்படி, இந்திய விமானப்படை (IAF) மூன்று தகுதியான விமானப் பயிற்சியாளர்களை (Qualified Flying Instructors) இங்கிலாந்துக்கு அனுப்புகிறது.
இவர்கள், ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) வேலி (Valley) என்ற இங்கிலாந்தின் முக்கியமான பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்க உள்ளனர்.
இது, இந்திய பயிற்சியாளர்கள் முதன்முறையாக பிரிட்டிஷ் விமானிகளுக்கு நேரடியாக அதிவேக ஜெட் பயிற்சி வழங்கும் வரலாற்றுச் சம்பவமாகும்.

இந்த ஒப்பந்தம், 2026 பிப்ரவரி 12 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற 19-வது இந்தியா-பிரித்தானியா விமானப்படை அதிகாரிகள் சந்திப்பில் எட்டப்பட்டது. ஆரம்பத்தில், இந்த நியமனம் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும்.
இதற்கு முன், 2025 அக்டோபரில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வந்தபோது, இரு நாடுகளும் இராணுவப் பயிற்சி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.
பிரித்தானியாவின் 3 முக்கிய இராணுவக் கல்வி நிறுவனங்களிலும் தற்போது இந்திய அதிகாரிகள் பயிற்சியாளர்களாக உள்ளனர்.
2024-ல் இந்திய கடற்படை அதிகாரி, Britannia Royal Naval College-ல் நியமிக்கப்பட்டார். 2025-ல் இந்திய இராணுவ அதிகாரி, ராRoyal Military Academy Sandhurst-ல் பயிற்சியாளராக சேர்ந்தார்.
இப்போது, விமானப்படை அதிகாரிகள் RAF Valley-யில் இணைவதால், மூன்று பிரிட்டிஷ் இராணுவக் கல்வி நிலையங்களிலும் இந்திய பயிற்சியாளர்கள் பணியாற்றும் நிலை உருவாகியுள்ளது.
The United Kingdom and India have agreed to further enhance military training engagements following the conclusion of the 19th UK-India Air Staff Talks today [12 in New Delhi.
— ANI (@ANI) February 12, 2026
Under the latest agreement, the Indian Air Force will deploy three Qualified Flight…
இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துகிறது. இரு தரப்பினரும் இணைந்து நடத்திய "Ajeya Warrior" போன்ற இராணுவப் பயிற்சிகள், "Cobra Warrior" மற்றும் "Tarang Shakti" போன்ற வான்படைப் பயிற்சிகள், இரு நாடுகளின் ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
இந்திய விமானப்படை பயிற்சியாளர்கள், BAE Hawk T2 மற்றும் Texan T1 விமானங்களில் பிரித்தானிய விமானிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இவர்கள் IAF கட்டுப்பாட்டில் இருந்தாலும், RAF அதிகாரிகளின் கீழ் பயிற்சி பணிகளை மேற்கொள்வார்கள்.
இது, இந்தியா-பிரித்தானியா பாதுகாப்பு உறவை நீண்டகாலம் வலுப்படுத்தும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |