சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் திருவிழா: கோடிகளில் கொட்டும் ஐசிசி-யின் பரிசுத் தொகை!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு சுமார் கோடி ரூபாய் பரிசுத் தொகையாக ஐசிசி அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் திருவிழா
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வரும் 19-ம் திகதி தொடங்கி மார்ச் 9-ம் திகதி வரை நடைபெறுகிறது.
இதில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் வைத்து நடத்தப்படுகிறது.
பரிசுத் தொகை அறிவிப்பு
இந்நிலையில், இந்த தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
இந்தத் தொடரின் மொத்த பரிசு தொகை ரூ.59.90 கோடியாகும். இது 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையைவிட 53 சதவீதம் (சுமார் ரூ.60 கோடி) அதிகமாகும்.
பரிசுத் தொகை விவரம்
சாம்பியன் பட்டம் வெல்லும் அணி: ரூ.19.50 கோடி
2-வது இடம் பிடிக்கும் அணி: ரூ.9.72 கோடி
Breakdown of a grand prize money pool for #ChampionsTrophy 2025 🏆
— ICC (@ICC) February 14, 2025
It’s All On The Line from February 19 🏏
More ➡️ https://t.co/cou1tEePD0 pic.twitter.com/QAturUtEYW
அரை இறுதி சுற்றில் தோல்வியடையும் அணிகள்: தலா ரூ.4.86 கோடி
லீக் சுற்றில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணி: தலா ரூ.29.50 லட்சம்
5, 6-வது இடத்தை பிடிக்கும் அணிகள்: தலா ரூ.3.04 கோடி
7, 8-வது இடத்தை பிடிக்கும் அணிகள்: தலா ரூ.1.21 கோடி
தொடரில் கலந்து கொள்வதற்காக 8 அணிகளுக்கும்: தலா ரூ.108 கோடி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |