உக்ரைன் மீது அணுஆயுதம்…உலக போரின் முகத்தை மாற்றும் என ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைன் மீது அணு ஆயுதம் மற்றும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா திட்டம்.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போரின் முகத்தை மாற்றும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை
ரஷ்யா அணு ஆயுதங்களையோ இரசாயன ஆயுதங்களையோ பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதில் ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தவறியதை அடுத்து, நாட்டின் தென்கிழக்கு பகுதிகளின் பெரும் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
PTI
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உக்ரைனின் பாதுகாப்பு படை நடத்தி வரும் மீட்பு தாக்குதலில், உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்து இருந்த கருத்தில், ரஷ்ய படைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்பட்டால், சிறிய அணுசக்தி அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட நேர்காணலில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், "வேண்டாம். வேண்டாம். வேண்டாம். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போரின் முகத்தை மாற்றும்." எனத் தெரிவித்தார்.
sky news
மேலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அமெரிக்காவின் பதில் எவ்வாறு இருக்கும் என்பதை தீர்மானிக்கும் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு; சீனாவின் அதிவேக சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலி!
ஆனால் உக்ரைனில் தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளை ரஷ்ய அரசாங்க அதிகாரிகள் நிராகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.