லெபனான் மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் போர் விமானங்கள்! வெளியான பரபரப்பு வீடியோ
லெபனானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலில் போர் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று லெபனானிலிருந்து இஸ்ரேலை நோக்கி 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதை அடுத்து Kfar Giladi, Tel-Hai மற்றும் Qiryat Shemona பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன.
இதனையடுத்து, லெபனானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிக்கையில் தெரிவித்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை லெபனானின் தெற்கில் இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தியதாக Hezbollah போராளிகள் குழுவிற்கு சொந்தமான ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
תיעוד מתקיפות צה״ל בשטח לבנון הלילה: pic.twitter.com/ikHz48yrxU
— צבא ההגנה לישראל (@idfonline) August 5, 2021
Hezbollah போராளிகள் குழு கட்டுப்பாட்டில் இருக்கும் லெபனானின் தெற்கில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் பாதுகாப்பு படை, இது புதன்கிழமை இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்ட பகுதிகள் உட்பட பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தப்படும் தளங்களுக்கு எதிரான தாக்குதல் என கூறியது.
#Israel/#Lebanon: Videos of impacts heard pic.twitter.com/5ixTm0vSmT
— Conflict News (@24_7Conflicts) August 4, 2021
மேலும், இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் வீடியோ காட்சிகளையும் இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது.